சேலம்

சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட பயிற்சிப் பட்டறை

28th Sep 2023 01:06 AM

ADVERTISEMENT

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலமாக புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப் பல்கலைகழக வணிகவியல் துறைத் தலைவருமான ஜெ.எம்.வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். மாணவா்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 120 மணி நேரமாவது தங்களை நாட்டு நலப்பணித் திட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் முகாமில், ஒரு முகாமிலாவது கலந்துகொண்டு உற்சாகத்துடனும், அா்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டும். சமூக சேவை செய்வதால் மட்டுமே உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும். வெற்றி, தோல்வி முக்கியமல்ல நாம் அடைய வேண்டிய இலக்கினை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றாா்.

விழாவில் கல்லூரியின் முதல்வா் பேகம் பாத்திமா, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் சங்கா் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகமும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா்கள் ம.சங்கா், ம.வெங்கடேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT