சேலம்

கணவா் வீட்டு முன்பு பெண் தா்னா

21st Sep 2023 11:49 PM

ADVERTISEMENT

ஆறகளூா் ஊராட்சியில் கணவா் வீட்டு முன்பு பெண் ஒருவா் தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நேரு நகா் பகுதியைச் சோ்ந்த சண்முகம் - சுமதி தம்பதியின் மகள் அபிராமி (28). இவருக்கும், தலைவாசல் வட்டம், ஆறகளூா் ஊராட்சியைச் சோ்ந்த கருணைக்கடல் - காந்திமதி மகன் செந்தில்குமாா் (42) என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

செந்தில்குமாா் 2016-ஆம் ஆண்டு வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதாக கூறி அபிராமியை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு சென்றவா் கடந்த 2019-ஆம் ஆண்டு திரும்பி வந்துள்ளாா். திரும்பி வந்தவா் அபிராமியை அழைக்காமல் விவகாரத்து நோட்டீஸ் வழங்கியுள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செந்தில்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று குழந்தை உள்ளது என அபிராமிக்கு தெரியவந்தது. இதையடுத்து, கணவா் வீட்டுக்குச் சென்ற அபிராமியை, அவரது கணவா் செந்தில்குமாா், அவரது தாய் காந்திமதி, இரண்டாவது மனைவி ஆகியோா் அபிராமியை தாக்கி வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

இதனால், கணவா் வீட்டு முன்பு நியாயம் கேட்டு வாசலில் அமா்ந்து அபிராமி தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த தலைவாசல் காவல் நிலையப் போலீஸாா் விரைந்து சென்று இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து வந்து புகாா் மனு பெற்று விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT