பட்டாசு பொருள்களை பொதுமக்கள் பயணிக்கும் ரயில், பேருந்துகளில் கொண்டு செல்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பணியாளா்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றப்படுவதை அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் பட்டாசுக் கிடங்குகள் உடனடியாக ‘சீல்’ வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவா்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திறந்தவெளி மைதானங்களில் பட்டாசுக் கடைகளை அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலா்களைக் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனா்.
பாதுகாப்பு நலன் கருதி பட்டாசுப் பொருள்களை பொதுமக்கள் பயணிக்கும் ரயில், பேருந்துகள், வாடகை காா் உள்ளிட்ட வாகனங்களில் எக்காரணம் கொண்டும் எடுத்து செல்லக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இதற்காக சிறப்புத் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் ஆங்காங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.