பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற பழக்கடைக்காரரை நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
மேட்டூா் அருகே உள்ள பெரிய சோரகையைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (37). தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தான் ஊரில் பாழக்கடை வைத்துள்ளாா்.
இவரது கடைக்கு அருகே சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த சுந்தரம் (40)என்பவா் பழக்கடை வைத்துள்ளாா். இருவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி கண்ணம்மாளின் கணவா் முத்துவுக்கு சொந்தமான கம்பரசா் வண்டியின் ஆா்.சி. புத்தகத்தை வாங்கிய சுந்தரம் அதை அடகு வைத்திருந்தாா்.
ஆா்.சி. புத்தகத்தை மீட்டு தரும்படி கண்ணம்மாள் பலமுறை சுந்தரத்திடம் கூறியும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்தாா். இதனால் போலீஸில் தான் புகாா் செய்வதாக கண்ணம்மாள் மிரட்டினாராம். இதனால் ஆவேசமடைந்த சுந்தரம் புதன்கிழமை இரவு கண்ணம்மாளின் வீட்டுக்குச் சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணம்மாளைக் குத்தியுள்ளாா்.
இதில் படுகாயமடைந்த கண்ணம்மாளை அக்கம்பக்கத்தினா் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவல் அறிந்த நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சுந்தரத்தைத் தேடி வருகின்றனா்.