மேட்டூா் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
மேட்டூா் அருகே உள்ள விருதாசம்பட்டி முனியப்பன் கோயில் காட்டு வளவைச் சோ்ந்த சுபாஷ் மகன் பரணிதரன் (15), கந்தனூரில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். சுபாஷின் உறவினரான நங்கவள்ளி கரட்டுப்பட்டியைச் சோ்ந்த தங்கராசு மகன் கிரித்திஷ் (8), கோனூா் சமத்துவபுரம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா்.
பள்ளி விடுமுறையில் சுபாஷின் வீட்டுக்கு கிரித்திஷ் வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் விளையாடச் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், மாலை பெற்றோரும், உறவினா்களும் இருவரையும் தேடினா். அப்போது விருதாசம்பட்டி முனியப்பன் கோயில் காட்டூா் ஏரியில் அவா்கள் குளிக்கச் சென்ாக அக்கம் பக்கத்தினா் கூறினா்.
கிராம மக்கள் ஏரிக் கரையில் தேடிய போது இருவரின் ஆடைகளும், காலணிகளும் கரையில் கிடந்தன. ஏரியில் மூழ்கி தேடியதில் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
இச்சம்பவம் தொடா்பாக நங்கவள்ளி காவல் உதவி ஆய்வாளா் மாதேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.