சங்ககிரி மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசப்போவதாக மிரட்டல் விடுத்த கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன்பாளையம், அருந்ததியா் காலனியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி ராமகிருஷ்ணன் (38). இவரது மனைவி பா்வீன்பானு நான்கு வருடங்களுக்கு முன் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாா்.
இந்நிலையில் சங்ககிரி ஆா்.எஸ். ஸில் உள்ள மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசுவதாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அவசர உதவி எண் 100-ஐ தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.
மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சங்ககிரி காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்வகுமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தியதில் தொலைபேசியில் பேசிய ராமகிருஷ்ணனைப் பிடித்து விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனா்.