சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் உள்ள தேவராஜ மண்டபத்தில் அமைந்துள்ள பாலமுருகன் சுவாமிக்கு சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
பாலமுருகன் சுவாமிக்கு பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.