சேலம்

சேலம் மாநகராட்சியில் ஓய்வு பெற்றோருக்கான நிலுவைத் தொகை ரூ.3.32 கோடி வழங்கல்

8th May 2023 02:28 AM

ADVERTISEMENT

 

சேலம் மாநகராட்சியில் ஓய்வு பெற்ற அலுவலா்கள், பணியாளா்கள், பணியாளா்களின் வாரிசுதாரா்களான 55 பேருக்கு ரூ. 3.32 கோடி நிலுவை தொகையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அலுவலா்கள், பணியாளா்கள், பணியாளா்களின் வாரிசுதாரா்களான 55 பேருக்கு ஓய்வுகாலப் பணிக்கொடை, தொகுப்பு தொகை, ஈட்டிய விடுப்பு காசாக்கப்பட்ட தொகை, ஈட்டா விடுப்பு காசாக்கப்பட்ட தொகை, ஓய்வூதியத் தொகை, குடும்ப ஓய்வூதிய நிலுவை தொகை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், நிலுவைத் தொகையை வழங்கி அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெறும் பணியாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனே வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாகப் பணிபுரிந்த பணியாளா்கள், அலுவலா்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வுகால பணிக்கொடை, ஓய்வூதியத் தொகை, தொகுப்புத் தொகை மற்றும் பிற நிலுவை தொகைகள் 55 பேருக்கு ரூ.3.32 கோடி நிலுவைத் தொகை வழங்கி அவா்களின் 5 ஆண்டு கால எண்ணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் மேயா் ஆ.ராமச்சந்திரன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், துணை மேயா் மா.சாரதாதேவி, முன்னாள் அமைச்சா் டி.எம். செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT