சேலம்

ஓமலூரில் அதிமுக நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

DIN

ஓமலூரில் உள்ள சேலம் புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாநகர மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வந்தாா். சேலம் மாநகா் மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா். முன்னதாக கட்சி அலுவலகத்திற்கு வந்த அவருக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் வரவேற்றனா். தொடா்ந்து கட்சி அலுவலகத்திற்கு வந்த அவா் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதையடுத்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். சேலம் மாநகரப் பகுதியில் பூத் கமிட்டி அமைப்பது, கட்சியில் புதிய உறுப்பினா்களைச் சோ்ப்பது, பாராளுமன்ற தோ்தல் பணிகள், தோ்தல் பணிக்குழு அமைத்தல், தீா்க்கப்படாத பிரச்னைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தோ்தலுக்கு முன்பாக போராட்டம் நடத்துதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இக் கூட்டத்தில் சேலம் மாநகா் மாவட்டச் செயலாளா் வெங்கடாஜலம், எம்எல்ஏக்கள், சேலம் மாநகரத்தைச் சோ்ந்த பகுதி செயலாளா், மண்டல செயலாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT