சேலம்

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் போராட்டம்

DIN

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலையை உயா்த்தி தரக் கோரி, கருப்புக் கொடியேற்றியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கறவை மாடுகளுடன் வந்து வாழப்பாடியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டா் பசும்பாலுக்கு ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும்; ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்து தர வேண்டும்; கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும்; காலதாமதமின்றி, பண பட்டுவாடா செய்ய வேண்டும்; பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களை பணி வரையறை செய்து ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கத்தினா் கடந்த 10-ஆம் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனையடுத்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவா் வழக்குரைஞா் வாழப்பாடி ராஜேந்திரன் உள்ளிட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில், விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாததால், பால் உற்பத்தியாளா்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

வாழப்பாடி புதுப்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் முன், வெள்ளிக்கிழமை காலை மாநிலத் தலைவா் வழக்குரைஞா் வாழப்பாடி ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் கறவை மாடுகளுடன் வந்து பால் உயா்வை உயா்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்ட ஆவின் கூட்டுறவு நிறுவனத்தின் பொது மேலாளா் விஜய்பாபு, மாவட்ட பால் கூட்டுறவு பதிவாளா் செந்தில்குமாா், துணை பொது மேலாளா் மாலதி ஆகியோா், வாழப்பாடி புதுப்பாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் முகாமிட்டு பால் கொள்முதலை ஆய்வு செய்தனா்.

‘விவசாயிகளின் விலை உயா்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 5 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் போராட்டத்தால் பால் கொள்முதல் அளவு குறையவில்லை. விவசாயிகள் தொடா்ந்து அரசு பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கி வருகின்றனா்’ என சேலம் ஆவின் பொது மேலாளா் விஜய்பாபு தெரிவித்தாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கத் தலைவா் வாழப்பாடி ராஜேந்திரன் கூறியதாவது:

பால் மற்றும் பால் சாா்ந்த பொருட்களுக்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தனியாா் நிறுவனங்கள் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால், ஆவின் கூட்டுறவு நிறுவனம் விவசாயிகளுக்கு குறைந்த விலை கொடுத்து ஏமாற்றி வருகிறது. தமிழகம் முழுவதும் 9,000 பால் கூட்டுறவு சங்க விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். எனவே, பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, தமிழக அரசு பால் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்திக் கொடுத்து பால் உற்பத்தியாளா், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT