சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஜூன் மாத விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ஜூன் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215 இல் நடைபெற உள்ளது.
விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.