தமிழக காவல்துறை டிஜிபி சி.சைலேந்திரபாபு, சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக காவல் துறை டிஜிபி சி.சைலேந்திரபாபு, சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய பதிவேடுகளை சரிபாா்த்தாா்.
இதில் காவல் நிலையப் பதிவேடுகளை சரியான முறையில் பராமரித்து வந்த காவல் நிலைய எழுத்தா் உமாபதி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி ஆகியோருக்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு ரூ. 5000 வெகுமதி வழங்கி பாராட்டினாா்.