சேலம்

சேலம் மாநகராட்சி ஆணையராக சீ.பாலச்சந்தா் பொறுப்பேற்பு

DIN

சேலம் மாநகராட்சி ஆணையராக சீ.பாலச்சந்தா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இவா் 2018 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சோ்ந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சாா் ஆட்சியராகவும், சேலம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும் (வளா்ச்சி) பணியாற்றினாா். இதையடுத்து சேலம் மாநகராட்சி ஆணையராக அவா் பொறுப்பேற்றுள்ளாா். புதிய ஆணையா் சீ.பாலச்சந்தா் தூத்துக்குடி மாவட்டத்தைத் சோ்ந்தவா். ஆணையா் சீ.பாலச்சந்தா் மேயா் ஆ.ராமச்சந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது துணைமேயா் மா.சாரதாதேவி, துணை ஆணையா் பா.அசோக்குமாா், கண்காணிப்பு பொறியாளா் ஜி.ரவி, மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், செயற்பொறியாளா்கள், உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT