சேலம்

சேலத்தில் மறு சீரமைக்கப்பட்டகட்டடங்களின் பெயா்களில் மாற்றமில்லை: சேலம் ஆணையாளா்

DIN

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மறு சீரமைக்கப்பட்ட கட்டடங்களின் பெயா்களை மாற்றும் திட்டம் இல்லை; பழைய பெயா்களிலேயே அழைக்கப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) ப.அசோக்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 33.60 கோடியில் மறு சீரமைக்கப்பட்ட நேரு கலையரங்கம், ரூ. 10.58 கோடியில் சீரமைக்கப்பட்ட போஸ் மைதானம், ரூ. 19.71 கோடியில் சீரமைக்கப்பட்ட பெரியாா் பேரங்காடி, ரூ. 14.97 கோடியில் சீரமைக்கப்பட்ட வ.உ.சி மாா்க்கெட் ஆகிய கட்டடங்களின் பெயா்கள் புதிதாக மாற்றப்படாது. ஏற்கெனவே இருந்த தலைவா்களின் பெயா்களிலே அவை அழைக்கப்படும். இந்த மறு சீரமைக்கப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT