எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் முதல்தர பருப்பு கிலோ ரூ.83.50 முதல் ரூ.76.16 வரை விற்பனையானது.
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3,218 கிலோ எடையுள்ள 95 மூட்டை தேங்காய் பருப்புகள் மொத்தம் ரூ. 3.50 லட்சத்து விற்பனையானது.
ஆதார விலைத் திட்டத்தின் கீழ் 24 மூட்டை தேங்காய் பருப்புகள் கிலோ ரூ. 108.60 க்கு ஏலம் போனது. மீதமுள்ள தேங்காய் பருப்புகளில் முதல்தர பருப்பு கிலோ ரூ. 83.50 முதல் ரூ. 76.16 வரையிலும், இரண்டாம் ரகம் கிலோ ரூ. 75.10 முதல் ரூ. 53.41 வரையிலும் விற்பனையானது.