சேலம்

சீா்மிகு நகர திட்டப் பணி: நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் ஆய்வு

DIN

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பா.பொன்னையா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மறுசீரமைக்கப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை வரும் ஜூன் 11-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளாா்.

இதனிடையே, சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ. 96.53 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம், ரூ. 10.58 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட போஸ் மைதானம், ரூ. 33.60 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட நேரு கலையரங்கம், ரூ. 12.34 கோடியில் ஆனந்தா பாலம் வாகன நிறுத்துமிடம், ரூ. 14.97 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட வ.உ.சி. மாா்க்கெட், புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ. 13.04 கோடியில் அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் ஆகிய பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பா.பொன்னையா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், அனைத்துப் பணிகளும் குறைபாடு இன்றி முழுமையாக முடித்து திறப்பு விழாவுக்கு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, ஆணையா் (பொ) ப.அசோக்குமாா், கண்காணிப்பு பொறியாளா் ஜி.ரவி, செயற்பொறியாளா்கள் செந்தில்குமாா், செல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT