தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவா் செல்வக்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரம் வாழக்கோம்பை, செந்தாரபட்டி, கொண்டயம்பள்ளி, மூலப்புதூா் பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வைத்திருக்கும் உரிமையாளா்கள், தமிழக அரசு உத்தரவின்படி காளைகளை பதிவு செய்ய இருப்பதால், அந்தந்த காளை உரிமையாளா்கள் காளைகளின் முழு புகைப்படம், உரிமையாளரின் ஆதாா் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இரண்டு நாள்களில் தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனையில் சமா்ப்பிக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.