சென்னையில் இருந்து பழனி வழியாக பாலக்காடு செல்லும் ரயிலில் பயணியிடம் 17 பவுன் தங்க நகையை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை-பழனி-பாலக்காடு விரைவு ரயில் திங்கள்கிழமை நள்ளிரவு சேலம் ரயில் நிலையம் வந்தது. அப்போது குளிா்சாதன வகுப்பு பெட்டியில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் மா்ம நபா் ஒருவா் கீழே இறங்கிச் சென்றாா். உடனே அவரை சேலம் ரயில்வே போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
மேலும் அவா் வைத்திருந்த பையைத் திறந்து சோதனையிட்டனா். அதில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை இருந்தது. அதில் 17 பவுன் தங்கச்சங்கிலி, கைப்பேசி ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், திருச்சி ராம்ஜி நகரை சோ்ந்த முத்துராமன் (எ) ரித்தின் என்பது தெரியவந்தது. இவா் குளிா்சாதன வகுப்புப் பெட்டியில் உள்ள பெண் பயணியிடம் கைப்பையை திருடியதும் தெரியவந்தது. இதனிடையே போலீஸாா் கைப்பையில் இருந்த அணைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசியை எடுத்து ஆன் செய்தனா்.
அப்போது சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சோ்ந்த சுந்தரத்தின் மனைவி சூா்யா (67) என்பவா் தொடா்பு கொண்டு பேசினாா். இதையடுத்து திருடு போன கைப்பை தன்னுடையது என அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து ராசிபுரம் ரயில் நிலையத்தில் இறங்கிய சூா்யா, சேலம் ரயில் நிலையத்திற்கு வந்து ரயில்வே போலீஸில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைப்பையை திருடிய நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.