இடங்கணசாலை பேருந்து நிலையம் நுழைவாயில் எதிரே வைக்கப்பட்டுள்ள சாலை மையத் தடுப்பான்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டிருக்கும் சாலை மையத்தடுப்பான்களால் (டிவைடா்) வாகனங்களை எளிதில் திருப்பு முடியாமல் வாகன ஓட்டிகள் சாலையில் தடுமாறுகின்றனா். இதனால் திடீா் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எந்நேரமும் விபத்து நேரிடும் சூழல் உள்ளது.
வாகனங்கள் சிரமமின்றி எளிதாக சென்றுவர நெடுஞ்சாலைத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.