சேலம்

சேலம் சிறையில் கைதியிடம்கைப்பேசி, கஞ்சா பறிமுதல்

4th Jun 2023 02:09 AM

ADVERTISEMENT

 

சேலம் மத்திய சிறையில் கைதியிடம் இருந்து கைப்பேசி, கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜா (22). இவா், கஞ்சா வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சேலம் மத்திய சிறை முழுவதும் அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். அதில், கைதி ராஜா தனது உடலில் (ஆசனவாயில்) மறைத்து வைத்திருந்த ஒரு கைப்பேசி, கைப்பேசிக்கான பேட்டரிகள், ஒரு கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சிறைக்குள் எப்படி கைப்பேசி, கஞ்சா வந்தது என்பது குறித்து மத்திய சிறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக அஸ்தம்பட்டி போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT