சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில், 353 மனுக்கள் வரப்பெற்றன.
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 353 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், மாற்றுத் திறனாளிகள் வழங்கிய 8 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ. 2.50 லட்சம் வங்கிக் கடன் மானியமும், 20 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.58 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகளும் என மொத்தம் 45 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முருகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் இரா.மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.