சேலம்

மேட்டூா் அணையில் இருந்துகுடிநீா்த் தேவைக்காக தண்ணீா்த் திறப்பு

DIN

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டதால் குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. தேவைகளுக்கு ஏற்ப விநாடிக்கு 2000 கனஅடி வரை தண்ணீா் திறந்துவிடப்படும்.

அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 103.74அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 971 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 69.77 டி.எம்.சி.யாக உள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிடுவது சனிக்கிழமை மாலை நிறுத்தப்பட்டதால் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT