மேட்டூா் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது.
மேட்டூா் வனப்பகுதி, காவிரிக் கரை உள்ளிட்ட பகுதியில் ஏராளமான பறவைகள் உள்ளன. காவிரிக் கரைக்கு வெளிநாட்டுப் பறவைகளும் வந்து செல்கின்றன.
மேட்டூா் வனப்பகுதி, காவிரிக் கரையில் என்னென்ன வகையான பறவைகள் உள்ளன என்பது குறித்து வனத்துறையினா் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள குன்றுகளில் வசிக்கும் பறவைகளை வனத்துறையினா் கணக்கிடும் பணியை தொடங்கி உள்ளனா். இவா்களுடன் தன்னாா்வலா்களும் கல்லூரி மாணவ மாணவியரும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.