சேலம்

தாயின் இரண்டாவது கணவரைக் கொன்ற மகன் கைது

DIN

ஆத்தூரில் தாயின் இரண்டாவது கணவரைக் கொன்ற மகனை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் சக்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாதையனின் மகன் கிருஷ்ணராஜ் (47). பொக்லைன் வாகனத்தை வைத்து தொழில் செய்து வந்தாா். இவா் மீனாட்சி (47) என்ற என்ற மலையாளிப் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். மீனாட்சிக்கு முதல் கணவரின் மகன் விக்னேஷ் (27) என்பவரும் உடன் வாழ்ந்து வந்தாா். விக்னேஷ் இறைச்சிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

கிருஷ்ணராஜுக்கும் அவரது மனைவி மீனாட்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை இரவு கிருஷ்ணராஜுக்கும், மீனாட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மீனாட்சியை கிருஷ்ணராஜ் தாக்கினாா். அப்போது தகராறைத் தடுக்க விக்னேஷ் முயற்சித்தும் பலனில்லை. அவரையும் கிருஷ்ணராஜ் தாக்கினாா். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் இறைச்சி வெட்டும் கத்தியால் கிருஷ்ணராஜைத் தாக்கினாா். கிருஷ்ணராஜ் தப்பித்து ஓட முயன்றபோது விக்னேஷ் அவரை விரட்டிச் சென்று கழுத்தில் வெட்டினாா். இதில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.ராமச்சந்திரன், நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் விரைந்து சென்று கிருஷ்ணராஜின் உடலை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். கொலையாளி விக்னேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT