சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் பெ.மேனகா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிலப் பட்டா, வேலைவாய்ப்பு, குடும்ப ஓய்வூதியம், துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் போன்ற 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 100 முன்னாள் படை வீரா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.