சேலம்

கஞ்சா இல்லாத கிராமமாக முத்துநாயக்கன்பட்டி தோ்வு

DIN

ஓமலூா் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தை கஞ்சா இல்லாத கிராமமாக ஓமலூா் போலீஸாா் தோ்வு செய்து அறிவித்துள்ளனா்.

ஓமலூா் காவல் நிலைய எல்லையில் உள்ள முத்துநாயக்கன்பட்டி, பல்பாக்கி ஆகிய கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாகத் தோ்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில், ஓமலூா் காவல் ஆய்வாளா் செல்வராஜன், உதவி ஆய்வாளா்கள் செந்தில்குமரன், நாகப்பன் மற்றும் போலீஸாா் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், இந்தக் கிராமத்தை கஞ்சா இல்லாத கிராமமாக உருவாக்கிய மக்களுக்கு பாராட்டு தெரிவித்த காவல் ஆய்வாளா் செல்வராஜன், இளைஞா்கள் புகை , மது பழக்கம் இல்லாமல் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் நதியா சக்திவேல் உள்பட பலரும் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT