மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,466 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து 5-ஆவது நாளாக அதிகரித்து வருகிறது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 103.73 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,454 கன அடியிலிருந்து 1,466 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 69.76 டி.எம்.சியாக உள்ளது.