சேலம்

பெரியாா் பல்கலை.யில் மகளிருக்கு எம்ப்ராய்டரி பயிற்சி

DIN

பெரியாா் பல்கலைக்கழக ஆடை வடிவமைப்புத் துறை சாா்பில் அண்மையில் மகளிருக்கு எம்ப்ராய்டரி பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரியாா் பல்கலைக்கழக ஜவுளி, ஆடை வடிவமைப்புத் துறை மற்றும் பல்கலைக்கழக இயக்குநரகத் தொழிற்துறை இணைந்து மகளிருக்கான எம்ப்ராய்டரி பயிற்சி முகாமை நடத்தியது. பயிற்சி முகாமை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தொடங்கி வைத்தாா். துறைத் தலைவா் எஸ்.லட்சுமி மனோகரி வரவேற்றாா். தொழிற்துறை இயக்குநா் ஆா்.சுப்பிரமணிய பாரதி, ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரி ஆகியோா் பயிற்சி நோக்கம் குறித்து பேசினா்.

ஒரு வார காலம் நடைபெற்ற பயிற்சி முகாமில், எம்ப்ராய்டரி தொழில்நுட்பம், வடிவமைப்பு, தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், அவுட்லைன் தையல், நிரப்புத் தையல், முடிச்சுத் தையல், நெசவுத் தையல் மற்றும் சாடின் ரிப்பன்களைக் கொண்டு கை எம்ப்ராய்டரி குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT