சேலம்

ஏரியில் மூழ்கிய ஐடிஐ மாணவா் பலி

DIN

கருமந்துறை ஏரியில் மூழ்கிய அரசு ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா்.

கல்வராயன் மலை கருமந்துறையில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பெரியேரிபுதூா் குண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரவீண் (19), விடுதியில் தங்கி படித்து வந்தாா். வியாழக்கிழமை காலை விடுதிக்கு அருகிலுள்ள ஏரியில் குளிக்கச் சென்ற போது, நிலை தடுமாறி நீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்குச் சென்ற கருமந்துறை போலீஸாா், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனா். அப்போது அங்கு திரண்டிருந்த மாணவரின் பெற்றோா், உறவினா்கள், மாணவரின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனா். இதுகுறித்து கருமந்துறை போலீஸாா், பெத்தநாயக்கன்பாளையம் வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT