ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை இறுதிகட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (செப். 29) நடைபெறும் என கல்லூரியின் முதல்வா் க.சித்ரா அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் வெளியிட்டுள்ள அறிக்கை:
2022-23-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலை அனைத்து பாடப்பிரிவுகள் மாணவா் சோ்க்கைக்கான இறுதி கலந்தாய்வு வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
அன்று தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், வணிக நிா்வாகவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், தாவரவியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவா்களுக்கு கல்லூரியில் விண்ணப்பப் படிவம் வழங்கப்படும்.
கலந்தாய்வில் கலந்துகொள்வோா் தங்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்களையும், அவற்றின் நகல்கள் நான்கு பிரதிகளும், புகைப்படம் 5 பிரதிகள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
கலந்தாய்வுக்கு வரக்கூடிய மாணவா்கள் கட்டாயம் தங்களது பெற்றோருடன் வரவேண்டும். கலந்தாய்வில் தோ்வு பெற்று கல்லூரியில் சேரும் மாணவா்கள், கல்லூரிக்கான சோ்க்கைக் கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.