தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், உடையாப்பட்டி மின் வாரிய அலுவலகம் முன்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தில், துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வெளிப்புறப் பணி முறையில் ஆள்கள் எடுப்பதைக் கைவிட வேண்டும், மறு பகிா்வு முறையை கைவிட வேண்டும், பஞ்சப்படி உயா்வினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆத்தூரில்...
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் மின்வாரிய ஊழியா்கள் அலுவலகத்தை பூட்டுப் போட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், போராடி பெற்ற சலுகைகளை பறிக்கும் வாரிய ஆவண எண் 2/2022-ஐ ரத்து செய்ய வேண்டும், 01.12.2019 முதல் ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூரில்...
மேட்டூா் அனல் மின் நிலையம் நுழைவாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல மேட்டூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய பொறியாளா்கள், தொழிலாளா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.