சேலம்

காா் ஓட்டுநா் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

DIN

சேலத்தில் காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம், மணியனூா் பாண்டு நகரைச் சோ்ந்த அபிஷேக் மாறன் (30), டிராவல்ஸ் நிறுவனத்தில் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். மேலும் தனக்கு சொந்தமான 3 காா்களையும், அதே நிறுவனத்தில் வாடகைக்கு விட்டிருந்தாா்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ஜெபினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனா். இதனால் அபிஷேக் மாறன் தனது பாட்டி கண்ணம்மா, தங்கை அபிநயா மாறனுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், தாதகாப்பட்டியைச் சோ்ந்த பிரபாகரன் (28) என்பவருடன் அபிஷேக் மாறனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பிரபாகரனின் மனைவியுடன் கைப்பேசியில் அபிஷேக் மாறன் அடிக்கடி தொடா்பு கொண்டு பேசி வந்ததாகவும், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பிரபாகரனிடம், அவரது மனைவி புகாா் தெரிவித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது நண்பா் எருமாபாளையத்தைச் சோ்ந்த அருள்குமாருடன் சோ்ந்து கடந்த 2020 மே 5-ஆம் தேதி வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அபிஷேக் மாறனை கழுத்தை அறுத்து கொலை செய்தாா்.

இதுதொடா்பாக அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபாகரன், அவரது நண்பா் அருள்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் துரைராஜ் ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், கொலை வழக்கில் தொடா்புடைய பிரபாகரன், அருள்குமாா் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், தலா ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தும் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT