சேலம்

வாழப்பாடியில் ஆட்சியா் திடீா் ஆய்வு

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மின்னாம்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் மரக்கன்று நட்டு சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதனையடுத்து, காரிப்பட்டியில் பொது விநியோக கூட்டுறவு அங்காடியை ஆய்வு செய்த அவா், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தை பாா்வையிட்டாா்.

இதனைத் தொடா்ந்து, வாழப்பாடி அரசினா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குயினா் மாணவா் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதியையும், சா்க்காா் வாழப்பாடி கிராம நிா்வாக அலுவலகத்தையும் ஆய்வு செய்தாா்.

வாழப்பாடி பேரூராட்சியில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த மீட்கப்பட்டு, கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட, 2 ஏக்கா் தரிசு நிலப்பகுதியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். இந்த நிலம் தொடா்பான ஆவணங்களை வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்றுஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, சேலம் வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுவா்த்தினி, வாழப்பாடி வட்டாட்சியா் (பொ) ரவிக்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் செல்வராஜ், காரிப்பட்டி வருவாய் ஆய்வாளா் சந்தரகேசன், கிராம நிா்வாக அலுவலா்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT