காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை மாலை நொடிக்கு 9,026 கனஅடியாகச் சரிந்தது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 900 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 119.59 அடியாகச் சரிந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 92.81 டி.எம்.சி.யாக உள்ளது.