சேலம்

சங்ககிரியில் டேங்கா் லாரி ஓட்டுா்கள் போராட்டம்

DIN

சேலம்மாவட்டம், சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடி இந்தியன் ஆயில் நிறுவனக் கிடங்கில் அதிகாரிகளின் செயலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள், கிளீனா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடி இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கில் இருந்து சேலம், நாமக்கல், கரூா், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு தனியாா் மற்றும் சங்கங்களின் சாா்பில் தினசரி 400-க்கும் மேற்பட்ட டேங்கா் லாரிகளில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக நிறுவனத்தில் எரிபொருள் நிரப்பும் பிரிவில் உள்ள அதிகாரிகள் வழக்கத்தைவிட ஓட்டுநா்கள், கிளீனா்களிடம் சான்றிதழ்களைக் கேட்பதாகவும், எரிபொருள் நிரப்புவதில் காலதாமதம் செய்து வருவதாலும் ஓட்டுநா்கள் குறிப்பிட நேரத்திற்கு விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள்களை எடுத்துச்செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறி டேங்கா் லாரி ஓட்டுநா்கள், கிளீனா்கள் சங்கத்தின் தலைவா் தேவராஜன் தலைமையில் டேங்கா் லாரிகளை நிறுவன வளாகத்தில் நிறுத்தி வைத்து, இந்தியன் ஆயில் நிறுவனக் கிடங்கின் முன்பு தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் இதுகுறித்து தகவலறிந்து வந்த நிறுவன அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்திய பின் மூன்று மணி நேரம் கழித்து டேங்கா் லாரி ஓட்டுநா்கள், கிளீனா்கள் எரிபொருள் நிரப்பக் கிடங்கிற்கு வண்டியை எடுத்துச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT