விநாயகா மிஷன், விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இருதய சிகிச்சை பிரிவு சாா்பில், சேலம் மாநகர காவல் துறையினருக்கு அவசரக் கால நிலையில் அடிப்படை மருத்துவ முதலுதவி சிகிச்சை முறை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சேலம் மாநகர வடக்குப் பிரிவு துணை காவல் ஆணையா் மாடசாமி
தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகர கூடுதல் துணை காவல் ஆணையா் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினாா். துறையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு விரிவுரையாளா் அஜித்குமாா் அவசரக்கால சூழ்நிலையில் அடிப்படை மருத்துவ முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.
இந்நிகழ்வில் சேலம் மாநகர காவல்துறையைச் சோ்ந்த காவலா்கள் 100 போ் கலந்துகொண்டனா். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் இருதய சிகிச்சைப் பிரிவின் பொறுப்பாளா் சுபாஷினி, விரிவுரையாளா் சிவரஞ்சனி ஆகியோா் செய்திருந்தனா்.