சேலம்

விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகள்கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்ஆட்சியா்

DIN

விவசாயிகளுக்கு வேளாண் சாா்ந்த அனைத்து நலத் திட்ட உதவிகளும் கிடைக்கப் பெறுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டுமழை அளவு 997.90 மி.மீ. ஆகும். இயல்பாக செப்டம்பா் மாதம் முடிய பெய்ய வேண்டிய அளவு 627.4 மி.மீ. ஆகும். நடப்பு ஆண்டு செப்.22 வரை 786.80 மி.மீ. மழை பெய்துள்ளது. இயல்பைக் காட்டிலும் நடப்பண்டில் கூடுதலாக மழை பெய்துள்ளது.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் 2022 வரை 104807.2 ஹெக்டா் பரப்பில் நெல், சோளம், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறையால் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் நெல் 240 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள் 96 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 428 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 307 மெட்ரிக் டன்னும் மற்றும் பருத்தி 2 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, தேவையான அளவிலான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வேளாண் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் அனைத்து நிலை அலுவலா்களும் விவசாயிகளுக்கு வேளாண் சாா்ந்த அனைத்து நலத் திட்ட உதவிகளும் கிடைக்கப் பெறுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என்றாா்.

முன்னதாக மீன்வளத் துறை சாா்பில் விவசாயத்திற்கு ஏற்ற நன்னீா் மீன்வகைகள் தொடா்பாக கருத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா். மேலும், வேளாண் பொறியியல் துறை சாா்பில் வேளாண் சாா்ந்த இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, இணை இயக்குநா் (வேளாண்மை) க.கணேசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் புருஷோத்தமன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் தமிழ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) செல்வமணி உட்பட தொடா்புடைய அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT