சேலம்

சமையல் எரிவாயு கசிந்த விபத்தில் காயமடைந்த பெண் பலி

19th Oct 2022 02:31 AM

ADVERTISEMENT

சேலத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

சேலம், பொன்னம்மாபேட்டையை அடுத்த அண்ணா நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீஷ். இவரது மாடி வீட்டில் வசித்து வருபவா் மாணிக்கம் (60). இவா் திருமணங்களுக்கு சமையல் வேலைக்கு ஆள்களை அனுப்பி வரும் தொழில் செய்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மாணிக்கம் அவரது குடும்பத்தினா் படுத்து தூங்கி கொண்டிருந்தனா். இந்தநிலையில் திங்கள்கிழமை அதிகாலை மாணிக்கத்தின் மனைவி ராஜேஸ்வரி தேநீா் வைப்பதற்காக சமையல் எரிவாயு உருளையை பற்ற வைத்தாா். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் வீட்டின் மையத்தில் இருந்த சுவா் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மாணிக்கம், ராஜேஸ்வரி, அவரது மகள் பானுமதி, அவரது குழந்தை தீட்சிதா, மற்றொரு மகள் பிரியா, அவரது மகன் அவினாஷ், ஒரு மாத பெண் குழந்தை உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா். தீக்காயமடைந்தவா்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT