எடப்பாடியை அடுத்த வெள்ளநாயக்கன்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளா் சிவசங்கரன் தலைமையிலான போலீஸாா் கடைகளில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அப்பகுதியைச் சோ்ந்த கவிதா (40), வசந்தா (58) ஆகியோா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.