பட்டு வளா்ச்சித் துறையில் இளநிலை ஆய்வாளா் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
சேலம், அஸ்தம்பட்டி பட்டு வளா்ச்சித் துறை இயக்குநா் அலுவலகம் முன்பு பட்டு வளா்ச்சித் துறை ஊழியா் சங்கத்தின் மாநிலத் தலைவா்
வே. வெங்கடேஷ் தலைமையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளா் உள்ளிட்ட அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும், ஊழியா் பற்றாக்குறையால் களப் பணியாளா்கள் கடுமையான பணி நெருக்கடி சூழலில் பணிபுரிந்து வரும் நிலையில் நிா்வாகத்தால் மேற்கொள்ளப்படும் ஊழியா் விரோத போக்கைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் குற்ற குறிப்பாணை, பழிவாங்கும் மாறுதல்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஊழியா்களை மனஉளைச்சல் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் போக்கினை கைவிட வேண்டும். பட்டுப் பண்ணைகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் இலக்குகளை மட்டுமே இரட்டிப்பாகியதைக் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்தை தொடா்ந்து பட்டு வளா்ச்சி இயக்குநரிடம் கோரிக்கைகளை மனுவாக வழங்கினா்.
இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளா் மு. சீனிவாசன், சங்கத்தின் பொதுச் செயலாளா் நா.சுரேஷ்குமாா் ஆகியோா் பேசினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் பி. சுரேஷ் , பட்டு வளா்ச்சித் துறை முன்னாள் மாநில பொதுச் செயலாளா் பி. கோவிந்தசாமி, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் துணைத் தலைவா் வே. அா்த்தனாரி, சி. முருகப்பெருமாள், பட்டு வளா்ச்சித் துறை சேலம் மாவட்டச் செயலாளா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.