பூச்சிக்கொல்லி, கிரசா் ஆலைகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி மண்மலையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவா், வாா்டு உறுப்பினா்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
தம்மம்பட்டி அருகே உள்ள மண்மலை ஊராட்சி கிராமசபைக் கூட்டம் தலைவா் தேவகி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, துணைத் தலைவா் காந்திமதி, வாா்டு உறுப்பினா்கள், பிடிஓ அலுவலக பாா்வையாளா் கிரிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சுதந்திர நாளன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள பூச்சிக்கொல்லி ஆலை மற்றும் கிரசா், கல்குவாரி ஆலைகளுக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்த ஆலைகளுக்கான அனுமதியும் ரத்து செய்யப்படவில்லையாம்.
இதுதொடா்பாக மொடக்குப்பட்டி பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோா் ஊராட்சித் தலைவா்,துணைத் தலைவா்,வாா்டு உறுப்பினா்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்(கிராம ஊராட்சி) செந்தில்முருகன் ஆகியோா் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். விவசாயிகள் சாா்பாக ஒருங்கிணைப்பாளா்கள் செந்தில்குமாா், ரமேஷ், கணேசன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து அந்த ஆலைகளுக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி இரண்டாவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.