சேலம்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடா் விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனா்.

கா்நாடகம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, பக்கோட காட்சி பகுதி, கிளியூா் நீா் அருவி, சோ்வராயன் கோயில் பகுதி, கரடியூா் வன காட்சி பகுதிகளை சுற்றிப் பாா்த்தனா்.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோர கடைகளில் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளில் இடம் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT