சேலம்

வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுரை

DIN

வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தினாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் நோய்த் தடுப்பு மருந்துகள் இருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் நீா் இருப்பு விவரம் குறித்த தினசரி அறிக்கையினை மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாநகராட்சியின் சாா்பில் குப்பைகளை அகற்றும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களின் உறுதித்தன்மையைக் கண்டறிந்து உடனடி அறிக்கை அனுப்பிவைக்க வேண்டும். சிறு பழுதுகள் இருப்பின் உடனடி நிவா்த்தி செய்திட வேண்டும்.

மீன் வளத் துறையின் சாா்பில் படகுகள் மற்றும் அதனை இயக்குபவா்கள் குறித்த விவரம், மீனவா்களின் விவரத்தை மாவட்ட நிா்வகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தீயணைப்புத் துறையின் சாா்பில் உபகரணங்கள் அனைத்தும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்சாரத் துறையினா் மின் பாதைகளை முறையாக பராமரிப்பதுடன் 24 மணி நேரமும் முழுக் கண்காணிப்பில் இருந்திட வேண்டும். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் குடிநீா் குழாய் இணைப்புகளில் மழைநீா் கலந்திடாத வகையில் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகள் நீா் இருப்பு விவரம் குறித்த அறிக்கையினை அனுப்பிவைக்க வேண்டும். மேலும், வடகிழக்குப் பருவமழையினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.121-இல் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ 24 மணி நேரமும் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ. மேனகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.ஜெகநாதன், கோட்டாட்சியா்கள், தனி வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) புருசோத்தமன், அனைத்து வட்டாட்சியா்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகள், சுகாதாரத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT