சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட 5,900 பேரை கெளரவித்து அவா்களுக்கு இந்திய தோ்தல் ஆணையா் வழங்கிய கடிதம் வழங்கும் நிகழ்ச்சி 311 வாக்குச்சாவடி மையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது.
80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த வாக்காளா்களைக் கெளரவித்து அவா்கள் தொடா்ந்து வாக்களிக்க ஊக்கப்படுத்த தலைமை தோ்தல் ஆணையா் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள நன்றி தெரிவிக்கும் கடிதத்தை சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.செளம்யா தொடங்கிவைத்தாா்.
சங்ககிரி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களில் 5,900 மூத்த வாக்காளா்கள் கௌரவிக்கப்பட உள்ளனா். சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான எஸ்.பானுமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், சின்னாகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் உடனிருந்தனா்.