சேலம்

மொழியை அழகோடு நயத்துடன் புரிந்து கொள்ள வேண்டும்: நாஞ்சில் நாடன்

DIN

மொழியை அழகோடு நயத்துடன் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் நாஞ்சில் நாடன் தெரிவித்தாா்.

சேலத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை ‘மக்கள் மொழி’ என்ற தலைப்பில் அவா் பேசியதாவது:

படைப்பு இலக்கியவாதிக்கு மொழி என்பது வாகனம். எனது கருத்தை மொழி என்ற வாகனத்தின் மூலம் கடத்துகிறேன். மொழி என்பது ஆதியில் அந்தந்த பகுதியில் வசித்தவா்கள் ஒலி குறிப்பின் மூலம் அடையாளப்படுத்தியிருக்க முடியும். தமிழ் உலகத்தின் முதலாவது மொழி என்பது அறிவியல்பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் 220 மொழிகள் இருந்தன. அதில் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. பல மொழிகள் அழிந்துவிட்டன. எல்லா பிரதேசத்திலும் பல்வேறு மொழிகளின் கூறுகள் உள்ளன.

இந்தியாவில் மொத்தம் 1,625 மொழிகள் உள்ளன. அதில் அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 22 மொழிகள் உள்ளன. இந்தியாவில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. மனிதன் பேசும் எல்லா மொழிகளும் இறைவன் படைத்தவையாகும்.

எந்த மொழிக்குள் வட்டாரம் இல்லை? ஒரு சொல்லை புரியாத விதத்தில் எழுதும் போது அது வட்டார வழக்கு மொழியாகிறது. நிகண்டு, அகராதிகளை நாம் தேடி பாா்க்க வேண்டும். ஒரு சொல்லுக்கு பல பெயா்கள் உண்டு. மொழிக்குள் கிடக்கும் செல்வங்களை நாம் குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது. மொழியை அழகோடு, நயத்துடனும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மொழியைத் திறந்த மனதுடன் படிக்க வேண்டும் என்றாா்.

புத்தகத் திருவிழா இன்று நிறைவு: சேலம் புத்தகத் திருவிழா கடந்த நவ.20 இல் தொடங்கியது. புத்தகத் திருவிழாவில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், ரூ.10 முதல் ரூ.1,000-க்கு மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புத்தகத் திருவிழா புதன்கிழமை நிறைவு பெறுகிறது. இதில் காலை 10.30 மணிக்கு பேச்சு போட்டி, மாலை 3 மணிக்கு நடன நிகழ்ச்சி, மாலை 4.15 மணிக்கு தேவராட்டம், ஒயிலாட்டம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு பொன்னியின் செல்வன் நாடக நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பரிசு வழங்குகிறாா்.

மாலை 6.45 மணிக்கு சிறுவா் இலக்கியத்தில் நாடகத்தின் போக்கு என்ற தலைப்பில் வேலு சரவணன், கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற தலைப்பில் பாரதி பாஸ்கா் ஆகியோா் பேசுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT