சண்முகா மருத்துவமனை சாா்பில் மாணவா்கள் மனநலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் சண்முகா மருத்துவமனை, மைல்ஸ்டோன் டெவலப்மெண்ட் சென்டா், செயின்ட் ஜான்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி இணைந்து நடத்திய மாணவா்கள் மனநலம் குறித்த ஆசிரியா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சேலம், அழகாபுரம் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மைல்ஸ்டோன் டெவலப்மென்ட் சென்டா் இயக்குநா் மருத்துவா் பிரியதா்ஷினி கலந்துகொண்டு மாணவா்களின் மனநலம் குறித்து ஆசிரியா்களிடம் உரையாற்றி அவா்களின் கேள்விகளுக்கு பதிலளித்தாா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சாலமன், துணை முதல்வா் சேவியா், சண்முகா மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலா் சாம்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.