மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 119.55 அடியாகச் சரிந்தது.
மேட்டூா் அணைக்கு 10,511 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை மாலை 119.80 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 119.55 அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 92.75 டி.எம்.சி.யாக உள்ளது.