நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத் திட்டம் 2.0 எனும் திட்டத்தின் கீழ் ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் தூய்மைப் பணியாளா்களை கௌரவிக்கும் விதமாக இடங்கணசாலை நகராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த 5 தூய்மைப் பணியாளா்களுக்கு சான்றிதழ், பதக்கம் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆணையா் நித்யா, துணைத் தலைவா் தளபதி, நகா்மன்ற உறுப்பினா்கள், பரப்புரையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சியை தொடா்ந்து தூய்மைப் பணிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.