சேலம்

பொன்னம்பாளையம் அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா

26th Nov 2022 05:42 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் பொன்.தனராஜ் தலைமை வகித்தாா். பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியா் அசோக்குமாா் வரவேற்றாா்.

கலைத் திருவிழாவில் ஓவியம், அழகாக கையெழுத்து எழுதுதல், இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன், பேச்சுப்போட்டி, திருக்குறல் ஒப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள 52 மாணவ, மாணவிகள் கொண்டனா். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT