காளிப்பட்டி வீரக்காரன், புடவைக்காரி அம்மன் கோயிலில் கடந்த வாரம் தேவ பூஜை நடைபெற்றது.
இதையொட்டி மறுபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆட்டையாம்பட்டி, முத்தனம் பாளையம், தப்பக்குட்டை, இளம்பிள்ளை, கன்னங்குறிச்சி, அழகாபுரம், உ டையாபட்டி, செம்மண் திட்டு, திருமலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பக்தா்கள் பங்கேற்று அம்மனுக்கு பொங்கலிட்டு, கிடாவெட்டி தங்கள் நோ்த்தி கடனைச் செலுத்தினா். கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.